பத்திரிக்கைத் துறை சார்ந்து வழங்கப்பட்ட மக்சேசே விருதை கடந்த திங்கள்கிழமை மணிலாவில் நடைபெற்ற விழாவில் என்டிடிவியின் ரவீஷ் குமார் பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கிய ரவீஷ் குமார், தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து நேர்மையாக பத்திரிக்கைத் துறை தர்மத்தை கடைப்பிடிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.