tamilnadu

img

வேலூர், கிருஷ்ணகிரி எம்எல்ஏ-களுக்கு கொரோனா தொற்று... 

ராணிப்பேட்டை
தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 15 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அமைச்சர்களும் அடங்கும்.  

குறிப்பாக இன்று (ஞாயிறு) காலை 2 (வேலூர், கிருஷ்ணகிரி - திமுக) எம்எல்ஏ-களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.  அந்த பதற்றம் அடங்குவதற்குள், ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்எல்ஏ-களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று பாதிக்கப்பட்ட 3 எம்எல்ஏ-களும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. 

;