tamilnadu

img

மத்திய அரசு வழங்கும் ரூ.6,000: உங்க பெயரை உடனே ‘செக்’ பண்ணுங்க...

மதுரை:
விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்று பிஎம்-கிசான் என்று கூறப்படும் Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவியாக வருடத்துக்கு ரூபாய் 6,000/- வழங்கப்படுகிறது.

பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயன்பெறுவார்கள் என மத்திய அரசு கூறுகிறது.  ஒவ்வொரு நாளும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைக்கின்றனர். பிஎம்-கிசான் திட்டத்தில் சேர்வது எளிது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் ஆப் லைன்மூலமாகவும் இணையலாம்.பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் ஆறாவது  தவணைத் தொகை ஆகஸ்ட் மாதம்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால்அதற்கு முன்பாக அரசு பயனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் வலைதளமான pmkisan.gov.in ல் மத்திய அரசு பயனாளிகளின் முழு பட்டியலையும் அப்லோட் செய்துள்ளது. நீங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நன்மையை பெற்றுள்ளீர்களா? இல்லையா? என்பதை இந்தப் பட்டியலில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

பிஎம்-கிசான் பயனாளிகள் பட்டியல் 2020 ல் எவ்வாறு சரிபார்ப்பது ?நிலை 1- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்லவும்.நிலை 2- முகப்புப் பக்கத்தில் Farmers Corner என்பதை தேடவும். drop-down மெனுவில் பல தேர்வுகள்இருக்கும் அதிலிருந்து Beneficiary List என்பதை தேர்வு செய்யவும்.நிலை 3- அடுத்து நீங்கள் உங்களுடைய மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் (sub-district), வட்டாரம் மற்றும் கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.நிலை 4- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Get Reportஎன்பதை சொடுக்கவும்.நிலை 5- பிஎம் கிசான் பட்டியல் 2020 திரையில் தோன்றும்.

முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பம் மற்றும் தவறான ஆதார் தகவல்கள் ஆகியவற்றால் பல விவசாயிகளின் பெயர்கள் இந்த பட்டியலில்இருக்காது. இந்த விவசாயிகள் தேவையான புதுப்பிப்புகள்/ மாற்றங்களை Farmers Corner பிரிவில் செய்யலாம்.திட்டத்தின் பலன்களைப் பெற அவர் கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

;