tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் மேலும்  303 பேருக்கு கொரோனா பாதிப்பு... 

மதுரை 
தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரையில் சென்னையைப் போலவே கொரோனா பரவல் புதிய உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 200-யை தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 2,298 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை தொடர்பாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இதுவரை 591 பேர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 1,379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தென் தமிழகத்தின் தலைநகர் பகுதியை போன்று மதுரை விளங்குவதால் அதனைச் சுற்றியுள்ள 10 மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

;