tamilnadu

மதுரை மருத்துவ ஆய்வகத்தை... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி

களையும் கட்டுப்படுத்த  பெரிதும்உதவி செய்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தமிழகத்திற்கு பெரும் தொண்டாற்றி வந்த ஆய்வகத்தை புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் மையத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது. 

மத்திய அரசு மேற்கொண்ட இந்தஇணைப்பு பணிகள் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டன.  இந்த மையத்தின் முக்கியத்துவம் கருதியும், புதுச்சேரி மையத்துடன் இணைப்பை மேற்கொள்ளும் முடிவு மதுரைமையத்தை நீர்த்துபோகச் செய்யும் செயல் என்று தெரிவித்து இந்த முயற்சியை கைவிடும்படி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்கடிதம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதியிருந்தார்.இதற்கு பதில் எழுதிய ஐசிஎம்ஆர் இயக்குனர், நிர்வாக காரணங்களுக்காகவும், சிக்கனம் கருதியும்  இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் அனைத்து மையங்களின் செயல்திறள் களையும் மேம்படுத்தும் நோக்கத்துடனும் இணைப்பு மேற்கொள்ளப் படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பின் பின்னணியில்...
மேற்சொன்ன கடிதத்திற்கு பதிலாக ஒரு கடிதத்தை மீண்டும் மத்தியசுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதியுள் ளார்.“கடந்த நவம்பர் மாதம் உலகப்புகழ்பெற்ற லான்செட் மருத்துவஆய்விதழ், மக்களின் சுகாதாரத்தில் மானுடம் அடைந்த அனைத்து நல்ல விளைவுகளையும் காலநிலை மாற்றம் இல்லாமல் செய்துவிடும் என்று தெரிவித்தது. அதுவும்குறிப்பாக “ஏந்திகள்வழி” பரவும் நோய்களை (vector borne diseases) அதிகரிக்கும் என்று ஆய்வுகளை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தது. இந்தியா போன்றவெப்பமண்டல நாடுகளில்  புதிதாகபரவும் நோய் கிருமிகள் தொற்றாக மாறி அதிகமான மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்றும்  அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவித்திருந்தது. அதிகரித்து வரக்கூடிய எபோலா, சார்ஸ்,கொரோனா போன்ற கொள்ளை நோய்களே இதற்கு சாட்சியாக உள்ளன” என்று விவரித்துள்ளார்.  

மேலும், புதுச்சேரியில் செயல்படும் அமைப்புடன் இணைக்கப் பட்டால் மதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகம் நிர்வாக ரீதியாகவும் சிக்கல் களை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “இந்த பின்னணியில்தான் மதுரையில் செயல் பட்டு வந்த ஐசிஎம்ஆர் (ICMR) போன்ற மையங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது செயல்பட்டு கொண்டிருக்கும்  மையங்களை மேம்படுத்தி இன்னும் அதிகமான மையங்களை நிறுவவேண்டிய தேவையும் உள்ளது. இந்த பின்னணியில் மதுரையில் செயல்பட்டு வந்த ஐசிஎம்ஆர் (ICMR) மையத்தை தொடர்ந்து செயல்பட அனுமதித்து, அந்த மையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;