tamilnadu

img

கொரோனா அச்சம்... டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மதுரை:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை,  மார்ச் 31-ஆம் தேதி  வரை தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைளை மூட உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கை  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. சிவகாசியைச் சேர்ந்த சங்கர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில்   நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. டாஸ்மாக் கடைகள்,  பார்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மார்ச் 31-ஆம் தேதிவரை தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள்  பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில்  வியாழனன்று விசாரணைக்கு  வந்தது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,  சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணையில் உள்ளது எனத் தெரிவித்தார்.இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து   உத்தரவிட்டனர்.

;