tamilnadu

img

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப்பணி துவக்கம்

மதுரை:
ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்ட அகழாய்வுப்பணி கீழடியில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 19 அன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளர்கள் மேற்கொண்டனர். கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கால் கீழடியில் அகழாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டன.  தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.  
இந்நிலையில்  கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள்  மீண்டும் தொடங்கியுள்ளதாக, தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

;