tamilnadu

img

பலசரக்குகள் விலை உச்சத்தில்

 மதுரை, மார்ச் 28- கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக மதுரையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்த பருப்பு விலைகள் உச்சத்திற்கு சென்றுவிட்டன.  உளுந்தம் பருப்பு கிலோ ரூ.80 முதல் ரூ.90  வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ ரூ120 முதல் ரூ150 வரை விற்கப்படுகிறது.  கிலோ ரூ.25-க்கு  விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.40-க்கு  விற்கப்படுகிறது. கிலோ ரூ.40 க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள  நிலையில் காய்கறி, பருப்புவகைகளின் விலைகளும் அதிகரித்து வருகிறது.  அரசு உடனடியாக விலை உயர்வைக் கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

;