tamilnadu

img

பிரதமர் மோடியின் உரை அபத்தமானது கார்த்தி சிதம்பரம் எம்பி.

புதுக்கோட்டை
பிரதமரின் உரை அபத்தமானது என்றார் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தாவது.

தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்டவற்றைப் பற்றி மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில்  வருகின்ற 5-ம் தேதி மின் விளக்கை அணைத்து, டார்ச் லைட்டை ஒளிரச் செய்யுமாறு பிரதமர் மோடி பேசி இருப்பது  அபத்தமானது.  இதை கேட்டால் விஞ்ஞானிகளும் ஏமாந்து போவார்கள்.

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

;