tamilnadu

img

நெல்லை மாநகராட்சியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்....

நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணி செய்யும் சுயஉதவி குழு பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.637 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திற்கு முன்பாக நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். முருகன், சுடலைமணி, செல்லத்துரை, சேர்மக்கனி, மாரியம்மாள், கலா மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சுரேஷ் மைதீன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

;