tamilnadu

img

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறப்பு இல்லை: அமைச்சர்

திருச்செங்கோடு,ஏப்.7- ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளது.  டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மதுக் கடைகளும், மதுபானக் கூடங்களும்  மூடப்பட்டன.இந்நிலையில்  சிலா் வேதிப்பொருள்களை கலந்து குடித்து உயிரிழந்தனர். சிலா் கடைகளை உடைத்து மது பாட்டில்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சிலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமர், முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

;