tamilnadu

img

தனிமையில் உள்ள முதியவர்களுக்கு சிறப்புக்குழு

தேனி:
தேனி மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் அத்தியாவாசிய தேவைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கொரோனா வைரஸ்  தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்படுள்ளது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் தனிமையில் வாழும்  60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே, இக்குழு உறுப்பினர்களை 9789437949,  9597126283, 9047224852, 8870685254, 8682967106 என்ற அலைப்பேசி எண்களில் அவசர உதவிக்கு  தொடர்பு கொள்ளலாம். மேலும், தற்போது முதியோர்களின் குறைகளை கேட்டறிவதற்கென மாநில அளவில் உருவாக்கப்பட்டுள்ள உதவி எண்களான 1800 4250 111 மற்றும் சமூகநல வாரிய உதவி எண்கள் 044 -28590804, 044-28599188 ஆகியவைகளை முதியோர்கள் பயன்படுத்தி  பயன்பெறலாம் என கூறியுள்ளார்.
 

;