tamilnadu

img

மலைவாழ் பழங்குடி  மக்களுக்கு எல்ஐசி, ஆசிரியர் கூட்டணி  சார்பில் நிவாரணம்

தேனி
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி செல்லா காலனியில் மலைவாழ் பழங்குடியினர் 44 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். கொரானா தொற்று காரணமாக வேலையில்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளான இம்மக்களுக்கு எல்ஐசி பெரியகுளம் கிளை சார்பில் 200 கிலோ அரிசி, 20 லிட்டர் எண்ணெய் 3 பெட்டி தக்காளி  மற்றும்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரியகுளம் வட்டார கிளை சார்பில் 30 கிலோ பருப்பு ,காய்கறிகள் 15 ஆம் தேதியன்று   வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிஐடியு   மாவட்ட செயலாளர் எம். இராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர்  எஸ். வெண்மணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார நிர்வாகிகள் செல்லத்துரை, இராஜ்குமார் ஆகியோர் மக்களுக்கு சமூக விலகல் இடைவெளி விட்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.   சிபிஎம் கிளை செயலாளர் கருப்பசாமி   உடன் இருந்தார்.
 

;