tamilnadu

img

தனிமையில் இருந்த இளைஞர் மூதாட்டியை கடித்துக் கொன்றார்

போடி, மார்ச் 27-     இலங்கையிலிருந்து போடிக்கு வந்து தனிமைப்படு த்தப்பட்ட இளைஞர் தப்பியோடி  சாலையில் சென்ற மூதாட்டியின் கழுத்தை கடித்ததில் மூதாட்டி காயமடைந்தார். பின்னர் மயங்கிய இளைஞரும், மூதாட்டியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். இலங்கையிலிருந்து  தமிழகத்திற்கு வந்து போடியில் வசிப்பவர் மணிகண்டன் (32). கொரானோ காரணமாக இவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் மணிகண்டன் வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து தப்பி வந்து  ஆடைகளைக் களைந்து  சாலையில் ஓடினார்.  பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தை கடித்துள்ளார். இதையடுத்து மூதாட்டிதேனி மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தார். மணிகண்டன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

;