tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கினர்

தூத்துக்குடி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளையின் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர்  சா மயில்  தலைமை வகித்தார் .அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர். ஜெபமணி சைலஸ், உதவி உறைவிட மருத்துவ அலுவலர். ஜெயபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் என் வெங்கடேசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திர ராஜன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் லால்பகதூர் கென்னடி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட கிளை மாவட்டசெயலாளர் தேசி முருகன் உள்ளிட்டோர் க லந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சு. செல்வராஜ் ஒருங்கிணைப்பு செய்தார்.
 

;