tamilnadu

img

கொரோனா தடுப்புப்பணிக்கு   வங்கி ரூ 5 கோடி நிதியுதவி

தூத்துக்குடி,ஏப். 1- தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பாரதப் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராமமூர்த்தி  கூறும்போது, உலகமெங்கும் சுமார் 194 நாடுகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பணியில் தன்னலம் கருதாமல் 24 மணி நேரமும் சேவை செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் மருத்துவருக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே அதிக அக்கறை கொண்டுள்ள மெர்க்கன்டைல் வங்கி நாடு எதிர்கொண்டுள்ள  கொரோனா ஒழிப்பு போராட்டத்திற்கு 5 கோடியை நன்கொடையாக வழங்குவதில் பெருமை கொள்கிறது என்று தெரிவித்தார்.

;