tamilnadu

img

வீட்டின் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்

ஆம்பூர், ஜூலை 5- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன கொமேஸ்வரம் பகுதியில் வசிப்பவர் விவசாயி கோவிந்தசாமி. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி யளவில் ஓசூரில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள கோவிந்தசாமி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாதனூர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கீளினர் வெங்கடேசன் மற்றும் வீட்டில்  இருந்த 3 குழந்தைகள் உட்பட 6  பேர் காயமடைந்த னர். அனைவரும் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;