tamilnadu

img

பீடித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பீடி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஊரடங்கு காலத்தால்  பீடிசுற்றும் தொழிலாளர்கள்  வீடுகளில்  4000  முதல்  6000 வரை  சுற்றிய பீடி கட்டுகள்  வீட்டில் உள்ளன. சுற்றிய பீடிகளை  கடையில் போட்டால் தான் கூலி கிடைக்கும்.அதை  வாங்கி தான் வீடடில் கால்  வயிறு அரை வயிற்றுக்கு கஞ்சி குடிக்கலாம்  என்று எதிர்பார்த்து  ஏமாற்றத்தில் வீரை, கிரியம்மாள்புரம், உப்பூர் பகுதி மக்கள் உள்ளனர். சுற்றி வைத்திருக்கும் பீடி கட்டுகளை  என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி கொண்டிருக்கின்றனர். அரசுமற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  பீடி தொழிலாளர்களுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று  பீடி தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

;