tamilnadu

img

144-ஆல் தவிக்கும் விவசாயிகள் வீனான கனகாம்பரம்

திண்டுக்கல் :  கொரானோ அச்சம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பிள்ளையார்நத்தம் சரளபட்டியில் கனகாம்பரம் அதிகளவில் பூத்துள்ளது. இதைப் பறித்து சந்தைக்கு கொண்டுசென்றால் விவசாயிகளின் வயிறு நிறையும். இதைப் பற்றி காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ கவலைப்படவில்லை. இதனால் கனகாம்பரம் பூக்கள் செடியிலேயே கருகிவருகிறது. துரை என்பவர் கூறுகையில்,
தினம்தோறும் 10 கிலோ முதல் 15 கிலோ வரை கனகாம்பரம் பூ கிடைக்கும் இந்தப் பூக்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் கடந்த நான்கு நாட்களாக பூக்கள் பூத்து வீணாகி விட்டது.  தினம்தோறும் பூக்களை எடுத்து விற்பனை செய்ய அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்றனர்.

;