tamilnadu

img

வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர் கைது

தஞ்சாவூர், ஏப்.23-கடந்த சில தினங்களுக்கு முன்புஒரு குறிப்பிட்ட சமுதாய பிரிவினரை இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் பரவியதால் தஞ்சை, புதுக்கோட்டை, பொன்னமராவதி மற்றும் பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட் டது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விசாரணை செய்து கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் முடுக்கி விடப் பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி(27). இவர்,திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்தார்.அதில், தன்னை தொடர்புபடுத்தி தனது புகைப்படத்துடன் பெண்களை இழிவாகப் பேசும் ஆடியோவையும் பதிவிட்டு புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்லம் சிதம்பர விடுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குகன்(26) என்பவர் வாட்ஸ்அப் மூலம் பல நபர்களுக்கு அனுப்பி உள்ளார். மேற்படி சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனஅந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசிய சம்பவத்திற்கு துணை போகுதல் உள்ளிட்ட பல்வேறுபிரிவுகளின் கீழ் குகனை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

;