tamilnadu

img

வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று  வீசும்


தமிழகத்தில் வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் கத்திரி வெயில் நிறைவடைந்து 3 வாரங்கள் கடந்த நிலையிலும் தொடர்ந்து கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது. 
தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். சென்னை, வேலூர், கடலூர்,காஞ்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது  என கூறி உள்ளது.


 

;