tamilnadu

img

தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 48 மணி  நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழையும், கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய் யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை திருவண்ணாமலை மாவட்டம் கலசப் பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;