tamilnadu

img

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ மூலம் பதிவு

சென்னை:

வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம், ஒப்புகைச் சீட்டு எண்ணுதல் என பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில்,வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு சந்திப்பில் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,"காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை (தபால் வாக்குகளுடன் சேர்த்து) தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களும், 88 பார்வையாளர்ளும் கண்காணிக்க உள்ளனர்.36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.ஒரு சுற்றின் முடிவு தெரியவர 30 நிமிடங்கள் ஆகும்.மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும்.வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனக்a கூறினார்.  


;