தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது
சென்னை:
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை சற்றே குறைந்த நிலையில் சனிக்கிழமையன்று மீண்டும் சவரனுக்கு192 ரூபாய் உயர்ந்துள்ளது.இதன்படி சென்னையில் ஒரு சவரன்ஆபரணத்தங்கம், 192 ரூபாய் உயர்ந்து, 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 24 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம்வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.
அத்திவரதர் உண்டியல் காணிக்கை ரூ.7 கோடி?
காஞ்சிபுரம்:
கடந்த 47 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் வெள்ளியன்றுடன் நிறைவடைந்தது. அத்திவரதரை பல லட்சம்பேர் தரிசித்தனர். இதுதொடர்பாக சனிக்கிழமையன்று ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது வரை உண்டியல் காணிக்கை ரூ.7 கோடி கிடைத்துள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் இங்கு பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குத் துப்புரவு பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.