tamilnadu

img

‘நீட்’ தேர்வில் மாபெரும் ஊழல்... காவல்துறை விசாரணையில் அம்பலம்

சென்னை:
எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்திருக்கின்ற பிரவீண்என்கிற மாணவனும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்ற ராகுல் என்கிற மாணவனும், சாய் சத்தியா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்ற அபிராமி என்கிற மாணவியும் தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இவர்களுக்காக வேறு சிலர் தேர்வு எழுதி, அவர்கள் பெற்றமதிப்பெண்களைத் தாங்கள் பெற்ற மதிப்பெண்களாகக் காட்டி, சேர்ந்திருப்பது காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து வெளிவந்திருக்கிறது. இதற்காக இவ்வாறு கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்காகத் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் அளித்திருப்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.இவ்வாறு பதிலியாக தேர்வு எழுதும் மாணவர் அவர் புகைப்படத்தை மட்டும்விண்ணப்பத்தில் ஒட்டியிருப்பார். மற்ற விவரங்களான பெயர், வயது, மதிப்பெண் பட்டியல், முகவரி மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கல்லூரியில் சேர இருக்கும் மாணவரின் விவரங்களாக இருந்திடும் 
“புகைப்படங்கள் முறையாகஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்குமானால், இந்த ஊழலை முன்பே வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்,” என்று புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.“இவ்வாறு பதிலி மாணவர்களாகத் தேர்வு எழுதிய கயவர்கள், சாதாரண நபர்கள் அல்ல. மருத்துவக் கல்வியில் ஆசிரியர்களாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது மருத்துவ மாணவர்களாகவோ இருக்கிறார்கள். சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்திலிருந்து அவரது நண்பர்கள் சுமார் ஆறு பேர் இதே போன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றும் புலனாய்வு அதிகாரி கூறியுள்ளார். இவர் தன்பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.“நீட் கோச்சிங் சென்டர்கள் நடத்துபவர்களில் சிலர், இத்தகு மோசடிகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். இதேபோல் நாடு முழுதும் நடைபெற்றிருக்கக்கூடும்,” எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

;