tamilnadu

img

தோழர் குருதாஸ் தாஸ் குப்தா மறைவு

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது. தோழர் குருதாஸ் தாஸ் குப்தா இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப்பொதுச்செய லாளர், ஏஐடியுசியின் மேற்குவங்க பொதுச் செயலாளர், பிறகு அதன் அகில இந்திய பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர். நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். அதற்காக தொழிலாளர் போராட்டங்களை விரிவுபடுத்த தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடையை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாக பணியாற்றி, தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்காகவும் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலுக்கு எதிராகவும்  பாராளுமன்றத்தில் குரலெழுப்பியவர்.தோழர் குருதாஸ்தாஸ் குப்தா அவர்களின் மறைவு நாட்டின் தொழிலாளி வர்க்கத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி தோழர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

;