tamilnadu

img

குளத்தை சீரமைத்த குடியிருப்போர் சங்கம்

சென்னை:
மாதவரத்தில் தங்கள் பகுதியில் உள்ள குளத்தை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தாமாக முன்வந்து தூர்வாரி சீரமைத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு வாட்டி வரும் நிலையில், சென்னை மாநகரமும் அதன் பிடியில் சிக்கி கடுமையாக தவித்துவருகிறது. 

இந்நிலையில் மாதவரம் பொன்னியம்மன்மேட்டில் 1.41 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளப்பன் குளத்தை அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தி னர் தூர்வாரி, ஆழப் படுத்தும் பணியில் ஈடுபட்ட
னர். இதற்காக மாதவரம் வடக்கு வட்டார அதிகாரியின் ஒப்புதலை முறையாக பெற்று இப்பணியை மேற் கொண்ட அச்சங்கத்தினர், மாதவரத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை யும் இதேபோல் அதிகாரி களின் அனுமதியை பெற்று தூர்வாரவுள்ளதாக தெரிவித்தனர்.

;