tamilnadu

img

8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை:
ஆசிரியர்கள் வரும் 8 ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு திரும்புமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதிக்குள் பணிசெய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

;