tamilnadu

img

இங்கிலாந்து எம்.பி.க்களுடன் தமிழக முதலவர் கலந்துரையாடல்

சென்னை:
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றுள்ள தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் நாடாளுமன்ற கூட்ட அரங்கில், அந்நாட்டு எம்.பி.க்களுடன் கலந்துரையாடினார். 
அப்போது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதையும் இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும்  கொண்ட மாநிலமாக  தமிழகம் திகழ்வதாகவும், தமிழகத்தில் விரிவான அளவில் இலவச மருத்துவசேவை வழங்கப்படுவதையும்  முதலமைச்சர் எடுத்துக் கூறினார்.
மேலும்  இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த   திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். புகழ்பெற்று விளங்கும்   கிங்ஸ் காலேஜ் ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி வளாகத்தை முதல்வர் சுற்றிப்பார்த்தார். கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு முழு ஆதரவு நல்கும் என்றும் தனது உரையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உடனிருந்தனர்.

;