சென்னை
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் பச்சையப்பன், அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் மோதிக்கொண்டனர், இதில் ஒரு மாணவனுக்கு வெட்டு விழுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 12 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் கத்தி, அரிவாள் கைப்பற்றப்பட்டது. காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.