tamilnadu

img

தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை : முதல்வர் பேச்சு

சென்னை:
தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என்றும்  தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக நடைபெற்ற  “ஒளிரும்  மாநாட்டை” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட முன்னணிதொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநாட்டில் முதலமைச்சர் பேசியதாவது: கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. இயல்பு நிலையை நோக்கிதமிழகம் முன்னேறுகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்.தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்தார்.

;