tamilnadu

img

முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுக : சிபிஎம்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனத்தமழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி.காலனி பகுதியில் திங்கள் அதிகாலையில் கருங்கல் சுற்றுச் சுவர் இடிந்து, வீட்டில்உறங்கிக்கொண்டிருந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ள  துயரச் சம்பவம் பேரதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இறந்து போன தலித் மக்கள்குடியிருப்புக்கு அருகில் அமைக்கப் பட்டிருந்த வசதிபடைத்த நபரின் பங்களாவின் காம்ப்வுண்ட் சுவர் இடிந்து விழுந்துஇந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆபத்து குறித்து அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டி ருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;