tamilnadu

img

வெங்காயம் பதுக்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை:
வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடை மற்றும் பல்பொருள் சிறப்பு அங்காடியில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அமைச் சர், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

;