tamilnadu

img

போலீசாரின் ஒருநாள் சம்பளம் திருப்பி அனுப்ப முடிவு

சென்னை:
ஓய்வில்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட போலீசாரின் ஒரு நாள் சம்பளம் அவர்களுக்கே திருப்பி தரப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம்அல்லது அதற்கும் மேலான தொகையை, தானாக முன்வந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் முதலமைச்சர் எடுத்த முடிவின் அடிப்படையில், அரசுக்கு தமிழக டி.ஜி.பி. கடிதம் எழுதியிருந்தார். அதில், கொரொனா தடுப்புப் பணியில் ஓய்வில்லாமலும், அர்ப்பணிப் போடும் போலீசார் பணியாற்றி வருவதால், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புத் தொகையை திருப்பித் தரவேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அதன்படி, போலீசார் மொத்தமாக அளித்திருந்த தொகையான ரூ.8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286, முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து திருப்பி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை, சம்பந்தப்பட்ட போலீசாரின் கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டு விட்டதா? என்பதை டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;