tamilnadu

img

ஜூலை 31 வரை பொது போக்குவரத்து கிடையாது...   தமிழக அரசு அறிவிப்பு...   

சென்னை 
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை 2.0 என்ற பெயரில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பாதியில் அதாவது ஜூலை 15-ஆம் தேதியில்  நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்தை (அரசு, தனியார் பேருந்துகள்) தொடங்க முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனெவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை 31- ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

;