tamilnadu

img

அதிகார பீடத்திலிருந்து மோடி அகற்றப்படுவார் : வைகோ

சென்னை, மே 6-வருகிற 23 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்திலிருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார் என்று வைகோ கூறினார். மதிமுக-வின் 26-வது ஆண்டு தொடக்க விழா எழும்பூரிலுள்ள தாயகத்தில் திங்களன்று(மே 6) நடந்தது. பெரியார், அண்ணா சிலைகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து கட்சிக் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட தலைவர் சு.ஜீவன், கழக குமார், பூங்கா நகர் ராம்தாஸ், முராக்புகாரி, தென்றல் நிசார், மல்லிகா தயாளன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வைகோ,“மதிமுக தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்து 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு சோதனைகள், இன்னல்களை கடந்து தொண்டர்களின் உழைப்பால் வெற்றி நடைபோட்டு வருகிறது” என்றார்.வருகிற 23 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்திலிருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார். 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும். 18 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெற இருக்கிற 4 தொகுதி இடைத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும். 25 ஆண்டுகால வரலாற்றில் பல எண்ணற்ற போராட்டங்களில் மதிமுக பங்கேற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜனநாயக உரிமை, மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. ஊழல் மலிந்த அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும் வைகோ கூறினார்.

;