tamilnadu

img

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு  படத்திற்கு தடை கோரி வழக்கு 

சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க  தடை விதிக்கக் கோரி தீபா சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாதுஎன்றும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப் படலாம் என்றும் தெரி வித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

;