tamilnadu

img

அரசு விழாவில் ஊடுருவும் சமஸ்கிருத ஸ்லோகம்  

சென்னையில் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து மேடைக்கு வந்த மூவர் வேதரிஷி ஸ்லோகங்களை ஓதினர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அரசு விழாவில் தொல்லியல் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னதாக சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

;