tamilnadu

img

அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலைகள் வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை:
மேட்டுப்பாளையம் கனகராஜ் சாதி ஆணவப் படுகொலையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர்  வெளி யிட்டுள்ள அறிக்கை :தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டசாதி ஆணவக் கொலைகள் நடந்துள் ளன. நாளுக்கு நாள் சாதி ஆணவப் படுகொலைகள்  அதிகரித்து வருகின்றன. இத்தகைய சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு  மவுனம் சாதித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கௌசல்யா தலித் இளைஞர் சங்கரை காதலித்தது திருமணம் செய்ததற்காக, சங்கர், சாதி ஆதிக்க சக்திகளால் ஆண வப் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் வசித்து வரும் கனகராஜ் மற்றும் வர்சினி பிரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காத லித்து வந்துள்ளனர். வர்சினி பிரியா தாழ்த்தப்
பட்ட வகுப்பை சார்ந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்ணை காதலித்த ஒரே காரணத்தினால் ஆத்திரமடைந்த கனகராஜின் சாதிவெறி பிடித்த  அண்ணன் வினோத் குமார் 25-06-2017 அன்று இரவு இருவரையும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். தம்பியையே சாதி ஆணவப் படுகொலை செய்த வினோத் குமார் போன்ற சாதி வெறி பிடித்த மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வர்சினிக்கு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும். வர்சினி குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;