tamilnadu

img

சிஐடியு மாநாட்டிற்கு நிதி அளிப்பு

சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டு நிதியாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நிதியை தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். அருகில் மூத்த தலைவர்  எஸ்.ராஜப்பா, கூட்டமைப்பின் துணைத்தலைவர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர் கோபிநாத், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1 பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், பகுதி-2ன் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர்.  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு சார்பாக ரூ.1லட்சத்திற்கான காசோலையை தமிழக பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், சிஐடியு மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது சிஐடியு தலைவர்கள் எம்.எல்.மல்கோட்யா, ஏ.ஆர்.சிந்து, மோகன் குமாரமங்கலம், ஜி.சுகுமாறன் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தமிழக நிர்வாகிகள் சி.பி.கிருஷ்ணன், டி.ரவிக்குமார், இ.சர்வேசன், கோபால், விவேகானந்தன் மற்றும் எம்.ராஜகேசி பானுமூர்த்தி, இ.சண்முகம், நடராஜன், பத்மநாபன், மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;