tamilnadu

img

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் மே 1 முதல் முழு ஊரடங்கு தளர்வு 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்த முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், தமிழக முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்," சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரமின்றி, முக கவசத்துடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருட்களை வாங்கி செல்லலாம். இதன்பின்னர் மே 1-ஆம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும்" என அறிவித்துள்ளார். 

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும் இன்றிரவு 9 மணிக்கு முழு ஊரடங்கு நிறைவு பெறுகிறது.  
 

;