tamilnadu

மதுரை மாவட்டத்தில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் உத்தரவு

சென்னை, ஜூலை 4-  மதுரை மாவட்டத்தில் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜூலை 4 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதி களிலும் முழு ஊரடங்கு 24.6.2020 அன்று அதி காலை முதல் 5.7.2020 நள்ளிரவு 12 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட் டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதி களிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது ஜூலை 6 அதிகாலை முதல் 12 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம்- 2005ன் கீழ் நீட்டிக்க உத்தர விட்டுள்ளேன். இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தி யாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனி மைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியா வசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதி களில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இரு முறை தெளிக்கப்படும். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவு வதையும், வெளியிடங்களில் முகக் கவ சத்தை அணிந்து செல்வதையும், சமூக இடை வெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசி யத் தேவை இல்லாமல் வெளியில் செல்வ தைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்து ழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்ட வுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;