tamilnadu

மாணவர்களுக்கு உடற்பயிற்சி: பள்ளிகளுக்கு அமைச்சர்  அறிவுறுத்தல்

சென்னை:
பள்ளி தொடங்கும் முன்மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டிவிட்டரில் புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

;