tamilnadu

img

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தேவையற்றது: மு.க ஸ்டாலின்

சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் இடைத்தரகர்கள் மூலமாக இ-பாஸ் பணம் பெற்றுக் கொண்டு வழங்கப்படு வதாகவும் சமீப காலமாக பரவலாக குற்றச் சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து நீடிக்கும் இ-பாஸ் நடைமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக் கள், பணிபுரிந்த, தொழில் நடத்திவரும் ஊர்களுக்கு திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக குறிப் பிட்டுள்ளார்.இது தளர்வுகளின் அடிப்படை நோக்கத்தையே அடியோடு சீரழிக்கும் அடாவடிச் செயல் எனவும் கூறியுள்ளார். அவசரங்களுக்கு விண்ணப்பிக்கும் இ-பாஸ் பொருந்தாத காரணங்களைச் சொல்லி பலமுறை நிராகரிக்கப் பட்டு விடுவதாகவும், பத்து முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் இ-பாஸ் குறித்த முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், ‘செயற்கையான’ தடையை ஏற்படுத்தி இன்னல்படுத்திட வேண்டாம் என்றும், எனவே இ-பாஸ் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

;