tamilnadu

img

ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் அமைச்சர் வேலுமணிக்கு துரைமுருகன் பதில்

சென்னை:
சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சொல்வது வதந்தி என்று அமைச்சர் வேலுமணி கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

“சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தைச் சிலர் உருவாக்கி யுள்ளனர். தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக ஊடகங்களும், எதிர்க்கட்சி களும் சொல்வது வதந்தி” என்று 
சென்னை ரிப்பன் மாளிகையில் 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடு நில
வும் நிலையில் அமைச்சர் வேலு மணி இவ்வாறு கூறியதற்கு திமுக,சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், இதைவிட ஜமக்காளத்தில் வடி கட்டிய பெரிய பொய் இருக்காது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகரத்தில் தாய்மார்கள் குடங்களுடன் காத்துக்கொண்டிருப்பதையும், அலைவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லா ஊடகங்களிலும் காட்டுகிறார்கள். தண்ணீர் பஞ்சத்துக்கு முழுக் காரணம் அதிமுக அரசுதான். சென்னைக்கு ஆதிகாலத்தில் பூண்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அடுத்து புழல் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தார்கள். அப்போது இருந்த மக்கள் தொகைக்கு இரண்டும் சரியாக இருந்தது.

அதற்குப் பிறகு மக்கள் தொகை அதிகமான பிறகுதான் கிருஷ்ணாவிலிருந்து தமிழ கத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்பட்டது. இப்போது நமக்கு வர வேண்டிய 12 டி.எம்.சி நீர் வரவில்லை. ஆனால்,எந்த அமைச்சரும் தண்ணீர் கேட்டுப் பெறவில்லை” என்றார்.சென்ற வருடம் ஆந்திராவில் நிறைய தண்ணீர் வீணானது. அப்போதே கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள் என்று கூறிய அவர், “ஆந்திராவிலிருந்து தண்ணீர் பெற்று செம்பரம்பாக்கம் சோழவரம், போரூர் ஏரியை நிரப்பி யிருந்தால் சென்னைக்கு இப்போது தண்ணீர் இருந்திருக்கும். ஆனால், இவர்கள் குவாரியில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரைக் கொண்டுவந்து தருவதாகச் சொல்கிறார்கள். ஈரோடு, திருச்சி, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டு வந்து தரலாம். தண்ணீர் கொண்டுவருவதற்கான புதிய திட்டம் எதையுமே இவர்கள் கொண்டுவரவில்லை” என்றும் குற்றம்சாட்டி னார்.
 

;