tamilnadu

img

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ-வின் மனைவி,மகளுக்கும் கொரோனா...

சென்னை
தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொரோனாவின் பரவல் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தலைநகர் மண்டலமான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் கொரோனவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி (வயது 61) கொரோனாவால் பாதிக்கப்பட்டு நந்தப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  
இதனால் அவரது குடும்பத்தினர் தனிமையில் வைக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

;