tamilnadu

img

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் உரிய அங்கீகாரம்: அமைச்சர்

சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழ கத்தில் கொரோனா தொடர்பான சர்வதேச கருத்த ரங்கினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகை யில்,  கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் அதை பரிசோதனை மூலம் நிரூபித் தால், அம்மருந்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் அதிகப்படுத்தப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அரசின் உத்தரவை மீறினால் நடவடிக்கை
கொரோனா விவ காரத்தில் அரசின் உத்தரவைமீறும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.சென்னையில் பேசிய அவர் கூறுகையில், மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் கொ ரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

;