tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா... ஒரே நாளில் 68 பேர் பலியான சோகம்...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் மின்னல் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதிய அதிர்ச்சியாக கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்தை (1,025) தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 737 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 44 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டின் 2-வது பெரியநகராக இருக்கும் மதுரையில் 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

;