tamilnadu

img

புதிய உச்சத்தில் கொரோனா பரவல்... தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உருக்குலைந்த சென்னை மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் புதிய வேகத்தில் பரவி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,47,326 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (செவ்வாய்) ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,743 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட நிலவரம் 
கடந்த சில நாட்களாக கொரோனவால் கடுமையான பாதிப்பை சந்தித்த சென்னை மண்டலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 79 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து மதுரையில் 450 பேருக்கும், திருவள்ளூரில் 360 பேருக்கும், செங்கல்பட்டில் 264 பேருக்கும், வேலூரில் 194 பேருக்கும், கோவையில் 188 பேருக்கும்,  திண்டுக்கல்லில் 153 பேருக்கும்,  கன்னியாகுமரியில் 122 பேருக்கும், விழுப்புரத்தில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 117  பேருக்கும், தூத்துக்குடியில் 112 பேருக்கும்,  சிவகங்கையில் 111 பேருக்கும்,தென்காசியில் 102 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 

;