tamilnadu

img

பேரா.க.அன்பழகன் மறைவுக்கு சிஐடியு இரங்கல்

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர்  ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களது மறைவுக்குசிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  ஆழந்தஅஞ்சலியை செலுத்துகிறோம்.பள்ளி பருவத்திலேயேதிராவிட  இயக்கத்தில் தன்னைஇணைத்துக் கொண்டவர். பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிட இயக்கத்தின் முதல்தலைமுறை தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.திராவிட இயக்கத்திற்காக தனது பேராசிரியர்  பணியை துறந்து முழுநேர அரசியல் பணிக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.அன்னாரது இழப்பு திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் பேரிழப்பாகும். திமுகவிற்கு பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட சோதனைகளை உறுதியுடன் எதிர் கொண்டவர்.தமிழக மக்களால் இனமான பேராசிரியர் என அழைக்கப்படும் அளவிற்கு புகழ்பெற்றவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வகித்தபோதும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களோடு அன்போடு பழகியவர்.அன்னாரை பிரிந்து வாடும் திமுகவினருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

;